FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கஞ்சி

முதலில் தாமரைக் கொட்டையை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை வறுத்துத் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

Updated On : 22 ஆகஸ்ட் 2019, 11:09 am IST
பகிர்:

 
தாமரைப் பருப்புக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
தாமரைப் பருப்பு - 100 கிராம்
புழுங்கலரிசி நொய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
 
முதலில் தாமரைக் கொட்டையை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை வறுத்துத் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். புழுங்கலரிசி நொய்யை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  வறுத்து வைத்துள்ள புழுங்கலரிசி நொய்யையும், அரைத்து வைத்துள்ள தாமரைப் பருப்பையும் கலந்து கொதிக்க வைக்கவும். புழுங்கலரிசி நொய் நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டுக் கிளறி இறக்கி வைத்து பருகலாம்.

பயன்கள்

Advertisement

Advertisement

இந்தத் தாமரைப் பருப்புக் கஞ்சி அடிக்கடி உண்டாகும் விக்கல் மற்றும் வாந்தியை குணப்படுத்தும். நாக்கில் சுவைத்தன்மை உணர முடியாதவர்களுக்கு அதை உணர வைக்கும். இவை அனைத்திற்கும் மேலாக ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இந்தக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments