FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மனநல மருத்துவம்

சிறப்புக் குழந்தையின் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு நற்செய்தி இதோ!

ஆட்டிஸம் உள்ளிட்ட மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான தீர்வு

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 3:07 pm IST
பகிர்:

ஆட்டிஸம் (Autism), செரிப்ரல் பால்சி (Cerebral Palsy), டௌன்ஸ்  குறைபாடு (Downs Syndrome) மற்ற பிற மனவளர்ச்சி குன்றிய, குறைபாடுடைய குழந்தையின் பெற்றோரா நீங்கள்? 

உங்கள் பதில் ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்...

சிறப்புக் குழந்தைகளைப் பற்றி நம் எல்லோருக்கும் உள்ள சில கேள்விகள்..

Advertisement

Advertisement

* வயதான நான் எவ்வாறு வளர்ந்த குழந்தையைப் பேணுவது?

* எவ்வாறு அவர்களை அன்றாட வேலைகளில் தொடர் ஈடுபாட்டுடன் வைத்திருப்பது?

* நமக்கு பிறகு நம் குழந்தையின் நிலை என்ன?

* அவர்களை பாதுகாப்பது யார்?

* அவர்கள் இவ்வுலகில் என்ன செய்வார்கள்?

இதுபோன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் / தீர்வு,  'பெற்றோர்களால், பெற்றோர்களுக்காக, சிறப்பு குழந்தையின் எதிர்காலத்துக்காக' அதாவது 'நமக்காக நம்மால்' உருவாக்கப்பட உள்ள கிளாப்ஸ் (CLAPS - Community Living Association for Parents of Special Citizens) அமைப்பு.

சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த வளாகத்தில், சிறப்புக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. 

ஐம்பது பெற்றோர்களால் அமைக்கப்படும் இந்த சிறப்பு வளாகம்,  திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெய்வேலி கிராமத்தில் அமைய உள்ளது. 

சிறப்புக் குழந்தைகளுக்கான தனிக் குடியிருப்பு, பெற்றோர்களுக்கான குடியிருப்பு, பொதுவான சமையலறை, உணவருந்தும் இடம், தொழில்முறைக் கூடம், அரங்கம், நீச்சல் குளம், யோகா மற்றும் தெரபி சென்டர், ஸ்கேட்டிங் ட்ராக் இன்னும் பல வசதிகளும் இருக்கும்.

உங்களுக்கு இவ்வமைப்பில் சேர விருப்பமிருந்தால் அல்லது இது பற்றிய விவரம் அறிய விரும்பினால் இளங்கோவன் – 91766 20551, சஞ்சய் ராவ் – 98400 24619,  குருமூர்த்தி – 97909 94041 ஆகியோரைத் தொடர்புகொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments