நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும்.
ஒரு சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அசதியாக இருப்பார்கள். சிலரோ குறைவான நேரம்தான் தூங்குவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆழ்ந்த தூக்கமே (sound sleep) இதற்கு காரணம்.
நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால் இடது பக்கமாகப் படுத்திருக்கும் போது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலது நாசி வழியாகத்தான் வரும். இடது நாசி வழியாக வராது.
வலது நாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக, நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும் போது இடது பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம். என்ன இன்று முதல் இப்படி தூங்கலாமா?
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!