ரயில், அரசு பஸ்களில் பழைய ரூ.500 நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும்
ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக டிசம்பர் 15-ஆம் தேதி வரை ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டுகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 5 நாட்களுக்கு முன்னதாகவே ரயில், பஸ்களில் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அன்று பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.