FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரயில், அரசு பஸ்களில் பழைய ரூ.500 நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும்

ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 9 டிசம்பர் 2016, 5:03 am IST
பகிர்:

ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக டிசம்பர் 15-ஆம் தேதி வரை ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டுகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 5 நாட்களுக்கு முன்னதாகவே ரயில், பஸ்களில் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அன்று பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments