பிகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்கார சம்பவம்: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
பிகார் மாநிலம் முசாஃபர்நகரில் சிறார் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
பிகார் மாநிலம் முசாஃபர்நகரில் சிறார் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிகார் அரசும், மத்திய அரசும் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குர் நிர்வகித்து வந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதும், அவர் நிர்வகித்து வந்த மற்றொரு காப்பகத்தில் 11 சிறுமிகள் காணாமல் போனதாக வந்த தகவலும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், கைதான முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குர், போலீஸ் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சிரித்தபடி சென்ற புகைப்படங்கள் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது. இது மக்களுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த சூழ்நிலையில்தான், பிகார் சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.