FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சொலல்வல்லன்!

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரர் வாஜ்பாய். மக்களவையிலும், மாநிலங்களவையிலும்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரர் வாஜ்பாய். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவர் ஆற்றிய பல உரைகள் பாராட்டுகளைக் குவித்திருக்கின்றன.
அதேபோன்று அவரது சொல்வன்மை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தது. எவரையும் புண்படுத்தாமல், அதேநேரத்தில் நயம்படப் பேசுவதில் வல்லவர் வாஜ்பாய்
ஒருமுறை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அணு ஆயுதங்கள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இந்திரா, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது' என்றார். அப்போது குறுக்கிட்ட வாஜ்பாய், வெறும் தொழில்நுட்பம் இருந்தால் போதுமா? எப்போது உற்பத்தி செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த இந்திரா, தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தாலே போதுமானது; ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். அதற்கு வாஜ்பாய் ஒரு கதையைக் கூறினார்.
ஒரு ஊரில் வேடன் ஒருவன் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருந்தான். துரதிருஷ்டவசமாக அவனிடம் துப்பாக்கி இல்லை. வெறும் உரிமம் மட்டுமே இருந்தது. இந்தச் சூழலில், ஊருக்குள் ஒரு நாள் புலி ஒன்று நுழைந்துவிட்டது. உடனடியாக இந்தத் தகவல் வேடனுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புலியைப் பிடிக்கச் சென்ற வேடன், அதற்கு முன்னால் சென்று தனது துப்பாக்கி உரிமத்தை காண்பித்தான். அப்போது மற்ற அனைவரையும் விட்டுவிட்டு முதல் ஆளாக வேடனைக் கொன்று தின்றது அந்த புலி.
இதுபோலத்தான் இருக்கிறது தற்போது இந்திராவின் கூற்றும் என்றார் வாஜ்பாய். இதைக் கேட்டு இந்திரா உள்பட அவை உறுப்பினர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர். இவ்வாறு எதிர்க்கருத்தைக் கூட நகைச்சுவையாகத் தெரிவிப்பதில் தேர்ந்தவராக இருந்தார் வாஜ்பாய்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments