சத்தீஸ்கர்: நக்ஸல் துணைத் தளபதி சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் அமைப்பின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் அமைப்பின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக நக்ஸல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி டி.எம். அவஸ்தி கூறுகையில், " சுக்மா மாவட்டத்தின் சிர்செட்டி, மூலூர் கிராமங்களில் நக்ஸல் தடுப்பு பிரிவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பனுத்புரா வனப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்ஸல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது நக்ஸல்கள் வனத்தின் அடர்ந்த பகுதிக்கு தப்பிச் சென்றனர்.
அதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையின் போது, நக்ஸல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது பெயர் சிங்கா என்பதும், கெர்லாபால் பகுதி மாவோயிஸ்ட் அமைப்பின் துணைத் தளபதி என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.