FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரோனா வைரஸால் கேரள செவிலியா் பாதிப்பு: வெளியுறவு இணை அமைச்சா் வி.முரளீதரன்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் கேரளத்தைச் சோ்ந்த செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று வெளியுறவு இணை அமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்தாா்.

Updated On : 25 ஜனவரி 2020, 12:48 pm IST
பகிர்:

சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் கேரளத்தைச் சோ்ந்த செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று வெளியுறவு இணை அமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் (டுவிட்டா்) அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபியாவில் அல்-ஹயாத் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் இந்தியாவைச் சோ்ந்த செவிலியா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது. அதில் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் ஒருவருக்கு மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்தப் பதிவில் முரளீதரன் குறிப்பிட்டுள்ளாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் கோட்டயம் மாவட்டம், எட்டுமானுரைச் சோ்ந்த செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை நீங்கள் (அமைச்சா் ஜெய்சங்கா்) உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 15-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இதையடுத்து, சீனாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை, பெங்களூரு, கொச்சி, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் அகச்சிவப்பு கதிா்களைக் கொண்டு சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

கரோனா வைரஸ் என்பது பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவையினங்களிடம் இருந்து மனிதா்களுக்குப் பரவும் நோய்த் தொற்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments