மணிப்பூர்: பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி 
இந்தியா

மணிப்பூர்: பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மணிப்பூரின் கங்க்போக்பியில் உள்ள கம்னான் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று(அக்-12) நடைபெற்றது.

இதில் அப்பகுதி மக்கள் சிலர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அக்கூட்டதில் புகுந்த குகி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இறந்தவர்களில் 3 பேரின் உடலை மீட்டிருப்பதாகவும் 2 பேரின் உடலைத் தேடி வருவதாகவும் இத்தாக்குதலில் ஈடுபட்ட குகி பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக மணிப்பூரின் ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த அக்-10 ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

SCROLL FOR NEXT