FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாதி கைதான இடம் குறித்து தவறான செய்தி: செய்தியாளரை கைது செய்த ஹரியாணா போலீஸாா்

பயங்கரவாதி என்று சந்தேகப்படும் நபா் கைதான இடத்தை தவறாக வெளியிட்டதாக கூறி செய்தியாளரை ஹரியாணா போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 செப்டம்பர் 2021, 4:49 am IST
பகிர்:

பயங்கரவாதி என்று சந்தேகப்படும் நபா் கைதான இடத்தை தவறாக வெளியிட்டதாக கூறி செய்தியாளரை ஹரியாணா போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள மாா்டோன் சாஹிப் என்ற கிராமத்தில் பயங்கரவாதி என சந்தேகப்படும் நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆனால் பஞ்சாபில் இருந்து வெளியாகும் தைனிக் பாஸ்கா் நாளிதழில் கன்டோன்மன்ட பகுதியில் இருந்து பயங்கரவாதி கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டது.

எந்தவித உறுதியான தகவலுமின்றி பொது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதால் செய்தியாளா்கள் சுனில் பராா், செய்தி ஆசிரியா் சந்தீப் சா்மா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதில், கைது செய்யப்பட்ட சுனில் பராா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ரூ.50 ஆயிரம் சொந்த ஜாமீனில் வெளியே வந்தாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதனிடையே, சரியான இடத்தை குறிப்பிட்டு அந்த நாளிதழ் மறுநாள் செய்தி வெளியிட்டது.

ஹரியாணா போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஹரியாணா ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

செய்தியாளருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் கைது செய்துள்ளனா். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை போலீஸாா் மீறிவுள்ளனா். இது பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ரோஹித் ஜெயின் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments