’2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை’
இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை அளிக்க வேண்டும் என்று புணே நிர்வாகம் அறிவித்திருந்தது.
படிக்க | கரோனா அதிகம் பரவக் காரணம் என்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்
Advertisement
Advertisement
இந்நிலையில், இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விலக்கு அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை. ஆனால் ஒரு தவணை மட்டுமே போட்டுக்கொண்டவர்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.