FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தனி அறையா?: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 8 செப்டம்பர் 2021, 4:54 pm IST
சட்டப்பேரவையில் தொழுகைக்குத் தனி அறை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
பகிர்:


ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை நடத்துவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. 

இதனைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பதற்றத்தை தவிர்க்கும் வகையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அவர்களை கலைத்தனர்.

Advertisement

Advertisement

ஜார்கண்ட் சட்டப்பேரவை வளாகத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை வேளையில் நமாஸ் செய்வதற்கு ஏதுவாக தனி அறை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேரவை வளாகத்தில் 'ஜெய் ஸ்ரீ அனுமான்', 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் பாஜக தொண்டர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments