FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கோவேக்ஸினுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம்?

கோவேக்ஸின் தடுப்பூசிக்கான உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 செப்டம்பர் 2021, 1:13 pm IST
கோவேக்ஸினுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம்?
பகிர்:

கோவேக்ஸின் தடுப்பூசிக்கான உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசி குறித்த கூடுதல் ஆவணங்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார நிறுவனம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments