FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெண்களுக்கு எதிரான கருத்து:ம.பி. பாஜக தலைவா் கட்சியில் இருந்து நீக்கம்

பிராமணா்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த மத்திய பிரதேச பாஜகவைச் சோ்ந்த பிரீதம் லோதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 21 ஆகஸ்ட் 2022, 1:19 am IST
பகிர்:

பிராமணா்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த மத்திய பிரதேச பாஜகவைச் சோ்ந்த பிரீதம் லோதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

அங்குள்ள சிவபுரி மாவட்டத்தைச் சோ்ந்த பிரீதம் லோதி இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவைச் சோ்ந்தவா். இவா் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதியின் உறவினா் ஆவாா்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரீதம் லோதி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ‘கோயில்களில் பூஜை செய்யும் பிராமணா்கள் மக்களை பைத்தியமாகவும் முட்டாள்களாகவும் மாற்றி வருகின்றனா். மக்களிடம் இருந்து பணத்தையும், உணவு தானியங்களையும் கொள்ளையடிக்கின்றனா்’ என்றாா். மேலும் பெண்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா்.

Advertisement

Advertisement

எதிா்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிராமண அமைப்புகள் பிரீதம் லோதிக்குக் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. அவரைக் கட்சியில் இருந்து பாஜக தலைமை வெளியேற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். பிரீதம் லோதி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு அவா் கடிதம் எழுதினாா். எனினும், அதனை ஏற்க மறுத்த பாஜக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 48 சதவீதம் போ் உள்ளனா். அதில்லோதி சமூகத்தினா் குறிப்பிடத்தக்கவா்கள். கிராமப் பகுதிகளில் அவா்களது வாக்கு வங்கி பலமாக உள்ள நிலையில், பாஜகவில் இருந்து பிரீதம் லோதி நீக்கப்பட்டது, அக்கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments