கேஜரிவால், மணீஷ் சிசோடியா இன்று குஜராத் பயணம்!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று குஜராத் செல்கின்றனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று குஜராத் செல்கின்றனர்.
நடப்பாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் கேஜரிவால் இன்று குஜராத் செல்கிறார். ஆமதாபாத்தில் உள்ள ஹிம்மத்நகரில் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். செவ்வாய்க்கிழமை பாவ்நகரில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்திலும் கலந்துகொள்கின்றனர்.
தில்லி ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கை குறித்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணையின் பிடியில் உள்ள மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மக்களுக்கு இலவச மின்சாரம், இலவச கல்வி, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்துள்ளது.
இதையும் படிக்க | தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்