இந்தியா

பிரதமரின் தாயார் விரைந்து குணமடைய கோயில்களில் பிரார்த்தனை

DIN

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி விரைவில் நலம் பெற வேண்டி உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 29) அனுமதிக்கப்பட்டார். 

மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு வயது 100. இவர், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மோடியின் தாயார் விரைந்த நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் பிரதமரின் தாயார் நலம் பெற வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.

ஓம்காரஸ்வரர் கோயில், உக்கிமத் கோயில், நிரிசிங் கோயில் உள்ளிட்ட உத்தரகண்டின் பல கோயில்களிலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத்-கேதர்நாத் கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதாக கோயில் குழுவின் தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT