இந்தியா

கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து; இரவு நேர ஊரடங்கு தொடரும்

DIN

கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் அதேநேரத்தில்  இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதையடுத்து கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மாநில அரசு முடிவெடுக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். 

அதன்படி, இன்று மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை முடிவுக்குப்பிறகு, கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில்  இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT