இந்தியா

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! கட்டிவைத்து அடித்த மக்கள்!

DIN

கர்நாடகத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை கிராம மக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக காவல் துறை சார்பில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு பகுதியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை கிராம மக்கள் இன்று கையும் களவுமாக பிடித்தனர். 

பள்ளி மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தெருவில் அந்த இளைஞரை கட்டி வைத்து அடித்தனர். 

பின்னர் சக்கராயபாட்னா காவல் துறையிடம் இளைஞரை கிராம மக்கள் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அவர், ஆசிரியர்களை வீட்டிலிருந்து அழைத்துச்சென்று பள்ளியில் விடுபவர் என காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT