ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை செப். 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பத்துமுறி பகுதியிலிருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு 3,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10 நிமிடம் தேக்கடி பகுதியிலிருந்து வாகமண் வரை செல்லலாம்.
இதையும் படிக்க: மழை மண்ணைத் தொட்டதால் பெங்களூருவில் அறை வாடகை விண்ணைத் தொட்டதா?
6 பேர் அமர்ந்து செல்லும் ஹெலிகாப்டர் சுற்றுலா செப்டம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது