பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாணத்தில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வர் பர்வேஸ் இலாஹி தலைமையிலான அரசாங்கத்தில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வர் பர்வேஸ் இலாஹி தலைமையிலான அரசாங்கத்தில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் புதிதாகப் பதவியேற்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் மொஹம்மது பலீக்-உர்-ரஹ்மான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உமர் சர்பராஸ் சீமா பிஎம்எல்-என் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய மறுத்துவிட்டார்.
Advertisement
Advertisement
இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் இலாஹி மற்றும் பிற முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!
பஞ்சாப் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், மக்களுக்குச் சேவை செய்வதற்கும் மாகாண அமைச்சர்கள் இரவும் பகலும் பாடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. என்று முதல்வர் கூறினார்.
பஞ்சாப் முதல்வர் தேர்தலில் பெரும் நாடகத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதல்வர் பெர்வைஸ் இலாஹியுடன் இணைந்து மாகாண அமைச்சரவையை இறுதி செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.