உ.பி. நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு: விசாரணைக் கைதி சுட்டுக் கொலை
உத்தரப் பிரதேசத்தில், நீதிமன்றத்தின் வெளியே விசாரணைக் கைதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், நீதிமன்றத்தின் வெளியே விசாரணைக் கைதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் கைதியான லக்கன்பால், ஹரியாணாவில் இருந்து உ.பி.யில் உள்ள ஹாபூர் நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருடன் சென்ற ஹரியாணாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
விசாரணைக் கைதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, மர்ம நபர்கள் நீதிமன்றத்தை விட்டுத் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.