முகப்பு
இந்தியா

கோதுமை இறக்குமதி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

 இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லையென மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2022, 3:34 pm IST
கோப்புப் படம்
பகிர்:


இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லையென மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

ரஷியா உக்ரைன் போரினால் கோதுமையின் ஏற்றுமதிக்கு அதிகமான விலையேற்றம் கண்டது. மேலும் வெப்ப அலையினால் பயிர் சேதமடைந்தது. இதனாலும் கோதுமையின் விலையில் ஏற்றம் கண்டது. 

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (எம்எஸ்பி) அதிகமாகவே உள்ளது.

Advertisement

Advertisement

அரசின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22 நிதியாண்டில் உள்நாட்டில் கோதுமை உற்பத்தி 10.64 கோடி டன்னை எட்டியது. 2020-21 ஆண்டு கோதுமை உற்பத்தியான 10.96 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு. இருப்பினும், 2016-17-லிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சராசரி ஆண்டு உற்பத்தியான 10.38 கோடி டன்னைக் காட்டிலும் கோதுமை உற்பத்தி அதிகமாகவே எட்டப்பட்டு வருகிறது என்று ஜூலை 1 ஆம் தேதி நரேந்திர சிங் தோமா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு நமது நாட்டிலே உள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பையும் கொண்டுள்ளது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments