சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!
சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஆக. 13) இரவு சேலம் செல்ல இருந்த விரைவு ரயில் நாளை (ஆக. 14) காலை புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில், இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாளை காலை 7.30 மணிக்கு புறப்படவுள்ளது.
Advertisement
Advertisement
தற்போது, அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஆக. 14) காலை 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 7 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
Southern Railway has announced that the express train scheduled to depart from Chennai Egmore to Salem tonight (Aug. 13) will instead depart tomorrow morning (Aug. 14).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.