FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாஜகவை வலுப்படுத்த கர்நாடகம் முழுவதும் பயணம் செய்வேன்: எடியூரப்பா

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியையும், அதன் மாநிலத் தலைமையையும் வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

1 பிப்ரவரி 2024, 3:40 pm IST
பகிர்:

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியையும், அதன் மாநிலத் தலைமையையும் வலுப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக கர்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

எடியூரப்பா வெள்ளியன்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்து மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை மற்றும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் விவாதித்தார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

Advertisement

Advertisement

பாஜக நாடாளுமன்றக் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டது. கர்நாடகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நல்ல செய்தியை அனுப்பியுள்ளது. 

பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மத்திய தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தனது செயல்பாடுகளைத் தொடருவேன், செப்டம்பர் முதல்வ வாரத்திலிருந்து மாநிலம் முழுவதும் பயணம் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பாஜக மற்றும் மாநிலத் தலைமையின் கரங்களை வலுப்படுத்துவேன் என்றார். 

ஆனால், கர்நாடக முன்னாள் முதல்வர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று கட்டங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சித் தொண்டர்களுடன் உரையாடி, வருங்காலத் தலைவர்களை அடையாளம் காண்பேன் என்றார்.

மற்ற கட்சிகளிலிருந்து வரும் நல்ல தலைவர்கள் தங்கள் கட்சியில் சேரும் எண்ணத்தை பாஜக வரவேற்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments