முகப்பு
இந்தியா

குஜராத்தில் இருந்து காங்கிரஸை அகற்ற வேண்டும்: யோகி ஆதித்யநாத்

குஜராத்தில் இருந்து காங்கிரஸை அகற்றினாலே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

Updated On : 3 டிசம்பர் 2022, 8:02 pm IST
பகிர்:

குஜராத்தில் இருந்து காங்கிரஸை அகற்றினாலே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பிரசாரத்தின் கடைசி நாளான இன்று ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் நகரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த பேரணியில் அவர் பேசினார். அப்போது குஜராத்தில் காங்கிரசை அகற்ற வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், இது அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார். 

Advertisement

இப்போது அதைச் செய்வது உங்கள் பொறுப்பு. உ.பி. மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் இரண்டு இடங்களும், ஆம் ஆத்மிக்கு பூஜ்யமும் மட்டுமே வழங்கினர். இன்று, குஜராத்தில் ஊரடங்கு மற்றும் கலவரங்கள் இல்லாமல் மாறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், நாடு பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் பிரிவினைவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச.5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இரண்டாம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.