முகப்பு
இந்தியா

ஸ்ரீசைலம் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு மேற்கொண்டார். மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 

Updated On : 26 டிசம்பர் 2022, 5:15 pm IST
பகிர்:

ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு மேற்கொண்டார். மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 

ஹைதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சன்னிபெண்டா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். சாலை மார்க்கமாக ஸ்ரீசைலம் கோயிலுக்கு வந்த முர்முவை ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் கோட்டு சத்தியநாராயணா, நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத், உள்ளூர் எம்எல்ஏ ஷில்பா சக்ரபாணி ரெட்டி மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். 

ஹைதராபாத்தில் இருந்து குடியரசுத் தலைவருடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோரும் ஸ்ரீசைலம் சென்றடைந்தனர்.

Advertisement

Advertisement

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள், தலைவர் முர்முவை வரவேற்றனர். கோயில் பூசாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். 

முதலில் ரத்னகர்ப்ப கணபதி ஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்த முர்மு, 
பின்னர் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமிக்கு ருத்ராபிஷேகமும், பிரமராம்பிகா தேவிக்கு கும்குமார்ச்சனையும் செய்தார். 

ஸ்ரீசைலம் கோயிலின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஸ்ரீ சைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்திற்கும் அவர் பார்வையிட்டார். 

முர்முவின் வருகையையொட்டி ஸ்ரீ சைலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பக்தர்களின் தரிசனத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, போக்குவரத்தை மாற்றியமைத்ததாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments