இமாச்சலில் மேகவெடிப்பு: நான்கு பேர் மாயம்
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற இடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பினால் திடீர் வெள்ளத்தில் 4 பேர் மாயமாகியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற இடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பினால் திடீர் வெள்ளத்தில் 4 பேர் மாயமாகியுள்ளனர்.
குலு மாவட்டத்தின் சலால் பஞ்சாயத்தில் உள்ள சோஜ் கிராமத்தில் காலை 6 மணியளவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு முதல் ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.
குலு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்மா கூறுகையில்,
Advertisement
Advertisement
முதல்கட்ட தகவலின்படி நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
மீட்புக் குழு அனுப்பப்பட்டாலும், நிலச்சரிவு காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டதாக மோக்தா கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.