FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிச் செல்லும் சிறுமி

காலை பறித்த விபத்தால் பாவம் அந்த 10 வயது சிறுமியின் தன்னம்பிக்கையை பறிக்க முடியவில்லை. அதனால்தான். தனது ஒற்றைக் காலில் குதித்தபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்.

Updated On : 26 மே 2022, 4:48 pm IST
ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிச் செல்லும் சிறுமி
பகிர்:

காலை பறித்த விபத்தால் பாவம் அந்த 10 வயது சிறுமியின் தன்னம்பிக்கையை பறிக்க முடியவில்லை. அதனால்தான். தனது ஒற்றைக் காலில் குதித்தபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்.

பிகார் மாநிலம் ஜமூய் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சீமா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சீமா தனது ஒரு காலை இழந்துவிட்டார். பல்வேறு சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஒற்றைக் காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை.

படிக்க வேண்டும்.. மற்ற குழந்தைகளைப் போல பள்ளியில் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூர்த்தி செய்ய, ஒரு கிலோ மீட்டர் தொலைவு, என்பது மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா என்ற திரையிசைப்பாடல்படி, அந்த ஒற்றைக் காலுடன் பள்ளிக்குப் புறப்படுகிறார் சீமா.

புத்தகப் பையை தனது தோளில் சுமந்து கொண்டு, ஒற்றைக் காலால் குதித்து குதித்து பள்ளிச் செல்கிறார். அவரைப் பார்க்கும் பலரும், அவருக்கு உதவ முன் வருகிறார்கள்.

இவரைப் பற்றிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சரியான வீடு இல்லாததால் வீடு கட்டித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

ஆரம்பத்தில் குதித்து குதித்து பள்ளிக்குச் செல்வது மிகுந்த கால்வலியை ஏற்படுத்தும். ஆனால் நாளடைவில் அதுவே பழகிவிட்டது என்கிறார் சிரித்தபடி சீமா.

மற்ற பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் உற்சாகத்துடன் பள்ளியில் பாடம் பயிலும் சீமா.. தன்னம்பிக்கையின் எல்லையாக விளங்குகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments