முகப்பு
இந்தியா

குறையும் கரோனா! நாட்டில் இன்றைய பாதிப்பு நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

Updated On : 21 அக்டோபர் 2022, 10:30 am IST
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினசரி வெளியிட்டு வருகிறது. 

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,948 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,582 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,84,646 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,037 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,50,97,574 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 4,63,338 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.