முகப்பு
இந்தியா

ராணுவ வீரர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்: குடியரசுத் தலைவர் இரங்கல்

ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என திரெளபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்

Updated On : 20 ஆகஸ்ட் 2023, 8:45 am IST
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
பகிர்:


லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள திரெளபதி முர்மு, லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. 

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துக்கத்திலிருந்து மீண்டுவர ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இறைவன் வலிமை கொடுக்க வேண்டும்

Advertisement

Advertisement

சாலைவிபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், கியாரி நகருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துகுள்ளானது. இதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments