நிதின் கரீர், பி.பி.கோபாலிகா 
இந்தியா

மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம்!

மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நிதின் கரீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1988-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான நிதின் கரீர் தற்போது கூடுதல் தலைமைச் செயலாளராக (நிதித்துறை) பணியாற்றி வருகிறார். இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தலைமைச் செயலாளராக பொறுப்பேற்கிறார். 

அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக பி.பி.கோபாலிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1989-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பி.பி.கோபாலிகா போக்குவரத்து, கால்நடை மற்றும் பணியாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார். 

தற்போதுள்ள தலைமைச் செயலாளர் ஹெச்.கே.திவிவேதியை தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள பி.பி.கோபாலிகா அடுத்த ஐந்து மாதங்கள் மட்டுமே இப்பொறுப்பில் இருப்பார். 2024 மே 31-ஆம் தேதி இவர் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT