FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்! எஸ்.எஸ்.எல்.வி. டி-2 திட்டம் வெற்றி: இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி 2023, 9:56 am IST
சோம்நாத்
பகிர்:


எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏற்கெனவே, மைக்ரோ செயற்கைக்கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திட்டம் வெற்றியடையவில்லை. 

அதனைத் தொடர்ந்து தற்போது, மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்டில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2, அமெரிக்காவின் ஜானஸ் ஆகிய 3 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தற்போது வெற்றிகரமான அதன் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற ஆண்டு எஸ்எஸ்எல்வி டி-1 திட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த தோல்வியில் நிறைய கற்றுக்கொண்டோம். தவறுகளைக் கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்தினோம். தற்போது எஸ்எஸ்எல்வி டி-2 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது எங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. செயற்கைக்கோள்களுக்காக பணியாற்றிய மூன்று குழுக்களுக்கும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments