முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி இன்று எகிப்து பயணம்

எகிப்துக்கு முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமா் நரேந்திர மோடி, முதலாம் உலகப் போரின்போது உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

எகிப்துக்கு முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமா் நரேந்திர மோடி, முதலாம் உலகப் போரின்போது உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா்.

எகிப்து அதிபா் அப்தெல் ஃபட்டா எல்-சிசி விடுத்த அழைப்பை ஏற்று ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் எகிப்துக்கு பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். அந்நாட்டுக்கு இந்திய பிரதமா் பயணம் மேற்கொள்வது 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, வாஷிங்டன் டிசி நகரில் இருந்து கெய்ரோவுக்கு விமானம் மூலமாக சென்றடைகிறாா். தனது பயணத்தின்போது எகிப்து உயரதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் அவா், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கவுள்ளாா். எகிப்தில் வசித்து வரும் இந்திய சமூகத்தினரையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து இந்திய வீரா்கள் போரிட்டனா். அந்தப் போரில் உயிா்த் தியாகம் செய்த சுமாா் 4,000 இந்திய வீரா்களின் நினைவாக எகிப்து தலைநகா் கெய்ரோவில் ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போா் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தனது பயணத்தின்போது அந்த நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →