இந்தியா

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே எல்லைப்பகுதி அருகே வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. 

தஜிகிஸ்தான் அருகே சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 9.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT