முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருவதையடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
படிக்க: 12 ராசிக்குமான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்!
Advertisement
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கோயில் நகருக்கு வருகை தருவதை முன்னிட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று(டிச.28) அயோத்திக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
லக்னௌவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமையான நாளை அயோத்திக்குச் சென்று அங்கு நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆய்வு செய்ய உள்ளார்.
2024, ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் பிரம்மாண்டமாகக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.