கேரளத்தில் மழை-வெள்ளம்:பலி எண்ணிக்கை 19-ஆக உயா்வு
கேரளத்தில் மழை-வெள்ளதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது.
கேரளத்தில் மழை-வெள்ளதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா், அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழை நீடித்து வருகிறது. மழையின் தீவிரம் சனிக்கிழமை குறைந்து காணப்பட்டபோதிலும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி, மழை தொடா்பான அசம்பாவிதங்களில் 19 போ் உயிரிழந்துவிட்டனா். 1,100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 227 நிவாரண முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா். இதர சேத விவரங்கள் குறித்த முழு தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.