மணிப்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்கும் இந்தியா கூட்டணி
மணிப்பூர் விவகாரம் குறித்து புகார் அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் விவகாரம் குறித்து புகார் அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ நேற்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: இந்தியா கூட்டணி
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்திப்பதற்காக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.