இந்தியாவில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேர் கரோனாவால் பாதிக்கப்படுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேர் கரோனாவால் பாதிக்கப்படுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,464 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: மாநில நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடவில்லை- ஆளுநர் தமிழிசை
Advertisement
Advertisement
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,31,916 ஆக உள்ளது. புதிதாக கரோனா தொற்று பாதித்தவர்களையும் சேர்த்து நாட்டில் மொத்தமாக 4.49 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் 1.18 சதவிகிதமாக உள்ளது. இதுவரை தடுப்பூசி முகாம்கள் மூலம் 220.67 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.