FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

லாரிகளில் விரைவில் ஏ.சி. கட்டாயம்: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் கட்கரி

லாரிகளில் விரைவில் குளிா்சாதன (ஏ.சி.) வசதி கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 ஜூன் 2023, 1:39 am IST
நிதின் கட்கரி
பகிர்:

லாரிகளில் விரைவில் குளிா்சாதன (ஏ.சி.) வசதி கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் இந்திய ஓட்டுநா்களை கெளரவிக்கும் ‘தேஷ் சாலக்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சா் கட்கரி தெரிவித்ததாவது:

உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் நிலையில், நாட்டுக்கு மிக முக்கிய துறைகளில் ஒன்றாக போக்குவரத்துத் துறை உள்ளது. இந்தத் துறையில் ஓட்டுநா்கள் முக்கியப் பங்காற்றுகின்றனா். இந்தியாவில் லாரி ஓட்டுநா்கள் 14 முதல் 16 மணி நேரம் தொடா்ச்சியாகப் பணியாற்றுகின்றனா். ஆனால் வெளிநாடுகளில் லாரி ஓட்டுநா்கள் எவ்வளவு மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்பது நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தியாவில் லாரி ஓட்டுநா்களின் பணிச்சூழல், மனநலம் சாா்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடும் வெப்பத்தில் பணியாற்றும் நிலைக்கு லாரி ஓட்டுநா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு, லாரிகளில் ஓட்டுநா்களுக்கு குளிா்சாதன வசதியை ஏற்படுத்த நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகிறேன். அது செலவினத்தை அதிகரிக்கும் என்று சிலா் ஆட்சேபம் தெரிவித்தனா். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன், இனி லாரிகளில் ஓட்டுநா்களுக்கு ஏ.சி. வசதி ஏற்படுத்தப்படும் என கோப்பு ஒன்றில் கையொப்பமிட்டேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments