FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் இனி இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாம்

இனி, சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள்.

Updated On : 1 மார்ச் 2023, 3:59 pm IST
பகிர்:

மும்பை: சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ஆக்ஸிஸ் வங்கி வாங்கும் நடைமுறை விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இனி, சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ரூ.12,325 கோடிக்கு கைப்பற்றுவதாக அறிவித்திருந்தது.

சிட்டி வங்கி, வாடிக்கையாளர் வணிகப்பிரிவில் கடன் வழங்குதல், கிரெடிட் கார்டு, சொத்துகள் மீதான கடன் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை மேற்கொண்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், சிட்டி வங்கியின் கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் அனைத்தும் ஆக்ஸிஸ் வங்கி என்று பெயர்மாற்றப்படும். அதேவேளையில், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கு எண், கட்டணம், சேவைகள் என எதையும் மாற்ற வேண்டிய அவசியமிருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இவர்களது வங்கிப் பெயர் மட்டுமே மாறுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஏடிஎம், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை என அனைத்தையும் வழக்கம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் அனைத்து நடைமுறைகளும் அப்படியேதான் இருக்கும் என்றும், எந்த கெடு தேதியிலும் மாற்றமிருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, சிட்டி வங்கியின் வாடிக்கையாளர்களின் ஐஎஃப்எஸ்சி கோடு உள்ளிட்ட விவரங்களும் மாறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments