FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த வேலையின்மை விகிதம் 

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 மார்ச் 2023, 4:35 pm IST
பகிர்:

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பொருளாதார காண்காணிப்பு மையம் அவ்வப்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நிலவிய வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில் நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் 8.55 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் பிப்ரவரி மாதம் சற்று குறைந்து 7.93 சதவிகிதமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே கிராமப்புற பகுதிகளில் 6.48 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் 7.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments