சாலை விபத்துகள்: 4 மாதங்களில் 4,900 பேர் பலி!
மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4,900 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 57% இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், 21% நடந்து சென்றவர்களும் உயிரிழந்ததாக காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement
மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 15,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.