பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை எச்சரிக்கை!
சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது.
சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது.
பஞ்சாப், பதான்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், மொஹாலி, ரூப்நகர், ராஜ்புரா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அண்டை மாநிலமான ஹரியாணாவின் அம்பாலா மற்றும் பஞ்ச்குலாவில் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் கனமழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.