FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜி20 உச்சி மாநாடு: காலை 4 மணி முதல் தில்லி மெட்ரோ ரயில் சேவை!

ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப். 8,9,10 ஆகிய தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 6 செப்டம்பர் 2023, 2:07 pm IST
பகிர்:

ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப். 8,9,10 ஆகிய தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

உச்ச நீதிமன்றம், படேல் சௌக் மற்றும் ஆர்.கே ஆசிரமம் மார்க் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடத்தில் வசதிகள் செப்டம்பர் 8-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் செப். 11ஆம் தேதி மதியம் வரை மூடப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வழக்கமாக மெட்ரோ ரயில் சேவை 5.30-க்கு தொடங்கும் நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் மெட்ரோ சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 

Advertisement

Advertisement

ஜி-20 மாநாடு தில்லியின் பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 

தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் செப்டம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்களுக்கு அனைத்து வழித்தடங்களின் முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணி முதல் தொடங்கும். காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும், காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான கால அட்டவணையின்படி இயங்கும் எனத் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments