பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் ஆந்திர கோயிலில் வழிபாடு!
ஆந்திர மாநிலத்தின், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் வழிபாடு செய்தனர்.
ஆந்திர மாநிலத்தின், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோர் வழிபாடு செய்தனர்.
ரிஷி சுனக்கின் பெற்றோரான யஷ்வீர் சுனக் மற்றும் ஊஷா சுனக், மாமியார் சுதா மூர்த்தி ஆகியோர் மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் வழிபாடு செய்தனர். அவர்களுடன் இன்ஃபோசிஸின் ஸ்ரீமதி சுதா நாராயண மூர்த்தியும் வந்திருந்தார். அவர்களுக்கு கோயில் சார்பில் ஸ்ரீஸ்வாமிஜி வஸ்திரம், கயிறு, நினைவுப் பரிசையும் வழங்கினார்.
இதனை ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தலைநகர் தில்லிக்கு வந்த ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பிரசித்தி பெற்ற அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.