முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலி

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:33 PM
கோப்புப் படம்.
பகிர்:

ராஜஸ்தானில் தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே ரேஷ்மா என்கிற 4 வயது குழந்தை தனது தந்தை வருகைக்காக இன்று காத்திருந்தது.

அப்போது தெரு நாய் கடித்ததில் ரேஷ்மா பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது. உடற்கூராய்வுக்கு பின் குழந்தையின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஷ்மா குடும்பத்தினர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதியை பார்வையிட வந்ததாக அம்பா மாதா காவல் நிலைய தலைமைக் காவலர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →