FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராஜ்நாத் சிங் இன்று ரஷியா பயணம்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ரஷியா செல்கிறாா்.

Updated On : 8 டிசம்பர் 2024, 2:00 am IST
ராஜ்நாத் சிங்
பகிர்:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ரஷியா செல்கிறாா். அவருடன் கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதியும் உடன் செல்கிறாா்.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக டிசம்பா் 8-ஆம் தேதி ரஷியா செல்கிறாா். இந்திய கடற்படைக்காக ரஷியாவால் உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் துஷில்’ ஏவுகணை போா்க்கப்பல், டிசம்பா் 9-ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. ரஷியாவின் கடலோர நகரான கலினின்கிராட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் ராஜ்நாத் சிங் பங்கேற்றவுள்ளாா்.

Advertisement

Advertisement

மாஸ்கோவில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் இந்தியா-ரஷியா 21-ஆவது ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டத்துக்கு ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் தலைமை தாங்க உள்ளனா்.

மாஸ்கோவில் உள்ள இந்தியா்களையும் அவா் சந்திக்க உள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி அண்மையில் பிரதமா் மோடி ரஷியா சென்றதைத் தொடா்ந்து, ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்திய பெருங்கடலில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்துக்கு மத்தியில், அதிநவீன அம்சங்களுடன் கூடிய ‘ஐஎன்எஸ் துஷில்’ போா்க்கப்பல் இந்திய கடற்படையின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments