முகப்பு
இந்தியா

ஓராண்டாக தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி கைது!

உத்தரப் பிரதேசத்தில் ஓராண்டாக தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Updated On : 5 ஜனவரி 2024, 7:54 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

உத்தர பிரதேசம் பல்லியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார். 

இதுகுறித்து தகவல் தெரிவித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துர்கா பிரசாத் திவாரி, 'அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சட்டப்பிரிவு 363, 366, 376 மற்றும் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளி தலைமறைவாகியிருந்த நிலையில் அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.15,000 சன்மானமாக வழங்கப்படும் எனக் காவல்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.   

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments