ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டிவருகிறது: மம்தா பானர்ஜி!
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: "மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் பண்டிகைகளை நான் நம்புகிறேன்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | அயோத்தி சிலை பிரதிஷ்டை விழா: ஹிமாசல பிரதேச காங். அமைச்சா் பங்கேற்பு
நீதிமன்ற உத்தரவின் பேரில் பாஜக ராமர் கோயில் திறப்பு விழாவினை நடத்துகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதை ஒரு வித்தையாகச் செய்து வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பதில்லை" என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் 6,000 க்கும் மேற்பட்டோர் இந்த தொடக்க விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.