முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி!

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

Updated On : 3 ஜூலை 2024, 6:38 pm IST
நரேந்திர மோடி / ஜகதீப் தன்கர் - ஏஎன்ஐ
பகிர்:

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) சந்தித்தார்.

மாநிலங்களவைக் கூட்டம் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் ஜகதீப் தன்கரை அழைத்து அவரிடம் உரையாடினார்.

மாநிலங்களவை பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் எல்.முருகன் உள்ளிட்ட மத்திய இணை அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

Advertisement

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) பதிலளித்து உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மோடி பேசும்போது அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

நரேந்திர மோடி - ஜகதீப் தன்கர் சந்திப்பின்போது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.